சென்னை: சென்னை நெற்குன்றம் விநாயகபுரத்தை சேர்ந்தவர் அந்தியப்பன். இவருக்கு ரவிராஜ் (9), சரண்ராஜ் (7) ஆகிய இரண்டு மகன்கள். இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது ரவிராஜ் மற்றும் அவரது சகோதரர் சரண்ராஜ் ஆகியோர் வீட்டின் முன்பு பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் ரவிராஜ் மற்றும் சரண் ராஜ் ஆகியோர் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.