×

தீபாவளி பட்டாசு வெடித்தபோது தீ விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவன் பலி

சென்னை: சென்னை நெற்குன்றம் விநாயகபுரத்தை சேர்ந்தவர் அந்தியப்பன். இவருக்கு ரவிராஜ் (9), சரண்ராஜ் (7) ஆகிய இரண்டு மகன்கள். இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது ரவிராஜ் மற்றும் அவரது சகோதரர் சரண்ராஜ் ஆகியோர் வீட்டின் முன்பு பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் ரவிராஜ் மற்றும் சரண் ராஜ் ஆகியோர் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

இதை பார்த்த பெற்றோர் குழந்ைதகள் மீது பிடித்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 28 விழுக்காடு தீக்காயங்களுடன் ரகுராஜூம், 9 விழுக்காடு தீக்காயங்களுடன் சரண் ராஜூம் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ரகுராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire crash ,fire accident ,
× RELATED கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு