சென்னை: ‘எம்டிசி’யில் பணம் கொடுத்து முறைகேடாக நடத்துனர் பணி பெற்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விஜிலென்ஸ் ேபாலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை பெரியபணிசேரியை சேர்ந்த அன்பழகன் என்பவர், கடந்த செப்டம்பரில் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த மனுவில், ‘சென்னை, ஐய்யப்பன்தாங்கல் பணிமனையில் நடத்துனராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். பணிக்கு சேர்ந்து, 5 ஆண்டுகள் ஆனநிலையில், லஞ்சம் கொடுத்து முறைகேடாக கட்டுப்பாட்டாளர் பதவியை பெற்றுள்ளார். இவர் நடத்துனர் உரிமத்தையே முறைகேடகா பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவரது உரிமத்தை ஆய்வு செய்து, உண்மை தன்மை கண்டறிவேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.