நகைக் கடை அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை ஆம்பூரில் மீண்டும்

ஆம்பூர், நவ.15: ஆம்பூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் நகைக்கடை அதிபர் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் ஷராப் பஜாரில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை அதிபருக்கு சொந்தமான வீடுகள், ஆயில் குடோன், துணிக்கடை மற்றும் பெட்ரோல் பங்க்கில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். 8 கார்களில் வந்த 30க்கும் மேற்பட்ட 4 குழுவினர் தீவிரமாக சோதனை நடத்தி சில ஆவணங்களை விசாரணைக்காக எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை ஒரு காரில் 4 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடந்த நகைக்கடையின் பின்புறம் உள்ள கடை அதிபரின் வீட்டில் சென்று சோதனை நடத்தினர். ஏற்கனவே, இந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்த பின்னர் வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர். பின்னர், நேற்று மீண்டும் வருமான வரித்துறையினர் 2ம் கட்ட சோதனை செய்ய வந்திருப்பதால் நகைக்கடை பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: