இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு துணைவேந்தர் அறிவிப்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில்

திருவலம், நவ.15: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது கஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பலத்தமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நேற்று முன்தினம் 13ம் தேதி முதல் அடுத்த மாதம் வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இன்று (15ம் தேதி) கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், இத்தேர்வுகள் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறும் எனவும் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

Related Stories: