வேலூர், நவ.15: தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் திணறி வந்தனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 பிளாக்குகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.