ஓமலூர், நவ.14: ஓமலூரில் ₹12 லட்சத்தில் புதிதாக கட்டபட்ட கிளை நூலக கட்டிடத்தை எம்பி பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஓமலூரில், கடந்த 1955ம் ஆண்டு முதல் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 8,190 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், நூலகத்துக்கு சொந்த கட்டிடம், அடிப்படை வசதிகள் இல்லாததால் வாசகர்கள் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு புதிய நூலகம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு புதிதாக கட்டிடம் கட்டப்படில்லை. இந்நிலையில், ஓமலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே, சேலம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹12 லட்சத்தில் புதிதாக கிளை நூலகத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டது.