லால்குடி, நவ. 14: திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த டால்மியாபுரத்தில் டால்மியா மேல்நிலைப் பள்ளி மற்றும் வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவி களுக்கு டெங்கு விழிப்புணர்வு, டெங்கு வரும்முன் காப்பது மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி டால்மியாபுரம் ரோட்டரி சங்க தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ராமநாதன் மற்றும் டால்மியா மருத்துவமனை டாக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ரோட்டரி குடும்பத்தினருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி ஆலோசனைகள் கூறினர். முகாமில் டால்மியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் ரோட்டரி செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.