16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, நவ.14: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜாமணி   வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களும்  (வயது வரம்பு 18க்கு மேல் 35க்குள்) கலந்துகொள்ளலாம்.

நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (டிசி, மார்க்சீட், ரேஷன்கார்டு, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கலந்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் 16ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: