திருச்சி, நவ.14: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களும் (வயது வரம்பு 18க்கு மேல் 35க்குள்) கலந்துகொள்ளலாம்.