474 பேர் பங்கேற்பு விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்

கும்பகோணம், நவ. 14: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு குறித்த சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.தஞ்சை நெறியாளர் கிட்டு தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தமிழருவி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான துரைரவிக்குமார், மண்டல செயலாளர் விவேகானந்தன், கருத்தியியல் பரப்பு துணை தலைவர் அரசாங்கம், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழினி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: