தஞ்சையில் மாதாந்திர விளையாட்டு போட்டி

தஞ்சை, நவ. 14: தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடந்தது.போட்டிகளை துவக்கி வைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் முதுநிலை மேலாளர் காந்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு வரவேற்றார். தடகள போட்டியில் 120 ஆண்கள், 105 பெண்கள் என மொத்தம் 225 பேர் பங்கேற்றனர். கைப்பந்து போட்டியில் 4 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணி என மொத்தம் 128 பேர், டென்னிஸ் போட்டியில் 30 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 46 பேர், நீச்சல் போட்டியில் 45 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 75 பேர் என மொத்தத்தில் 474 பேர் பங்கேற்றனர். மாவட்ட பளுதூக்குதல் பயிற்றுநர் செந்தில்குமார் நன்றிகூறினார்.

Related Stories: