சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வேளாண்துறை திட்டங்கள் ஆய்வு

சேதுபாவாசத்திரம், நவ.14: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடப்பு பருவ வேளாண்மை பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.அப்போது கொள்ளுக்காடு கிராமத்தில் அக்னி ஆறு உபவடி நிலப்பகுதியின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் புதுப்பட்டினம், வெளிவயல், அடைக்கத்தேவன், விளங்குளம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம், நேரடி நெல் விதைப்பு செய்யவும், தற்போது பெய்துள்ள பருவமழையை பயன்படுத்தி உழவு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஜஸ்டின் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா உடனிருந்தனர்.

Related Stories: