×

குளித்தலை பகுதியில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் துண்டு பிரசுரங்கள் வினியோகம்

குளித்தலை, நவ. 14: கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள மணத்தட்டை காவிரி ஆற்றுப்பகுதியில் நீதிமன்றத்தின் தடையை மீறி எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இயங்கும் மணல் குவாரியையும், குளித்தலை அருகே ராஜேந்திரம் பகுதியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கையும் மூடக்கோரி காவிரியாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை(வியாழக்கிழமை) குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் நல்லக்கண்ணு பங்கேற்றுகிறார். இக்கூட்டத்தின் கோரிக்கைகளை விளக்கியும், அனைத்து தரப்பினரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தும் குளித்தலை பகுதியில் காவரியாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Tags : bathroom area ,Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி