கரூர், நவ. 14: கரூர் பசுபதீசுவரர்கோயிலில் சூரசம்ஹாரவிழா நடைபெற்றது, கந்தசஷ்டி விழாவையொட்டி கரூர் பசுபதீசுவரர் கோயிலில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வர, நான்கு மட விளாக சந்திப்பிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலிலும் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. வெண்ணைமலை நான்கு மாடவீதிகளிலும் சூரனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.