×

செந்தில் பாலாஜி சவாலை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை

கரூர், நவ. 14:  செந்தில் பாலாஜி விடுத்த சவாலை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய  வேண்டிய அவசியமில்லை  என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் 3 கால்நடை மருந்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார். ரங்கநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது:அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கின்றனர் என்றார். அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்றார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உங்களை ராஜினாமா செய்து விட்டு தன்னோடு போட்டியிட தயாரா என சவால்விட்டது குறித்து கேட்டபோது, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர் பதவியில் இருந்தபோது ராஜினாமா செய்தாரா, நானும் சவால் விட்டிருக்கிறேன். தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியவரும். இவ்வாறு எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

Tags : Senthil Balaji ,minister ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...