நர்சரி பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை பயிற்சி

ராஜபாளையம், நவ.14: ராஜபாளையத்தில் நர்சரி பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட நர்சரி பள்ளிகள் சங்கத் தலைவர் திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கத்தலைவர் குமரேசன் வரவேற்றார். சென்னை தனியார் நிறுவன பயிற்சியாளர் ராஜகோபாலன் ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை பயிற்சி அளித்தார். மாவட்டம் முழுவதிலிருந்து 26 நர்சரி பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: