அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும்

திருமங்கலம், நவ.14:மதுரை தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடவேண்டும். தமிழகத்தில் மக்கள் விரோத அரசாக செயல்படும் அதிமுக அரசு மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் மத்திய அரசையும் கண்டித்து திமுக நடத்தும் போராட்டங்களில் மதிமுகவினர் திரளாக கலந்து கொள்வது, திருமங்கலத்தில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்கவேண்டும், திருமங்கலம், திருப்பரங்குன்றம், பேரையூர் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவைத்தலைவர் சக்திவேலு, மாவட்ட பொருளாளர் பஞ்சுராஜா, நகர நிர்வாகி திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: