×

மாநகராட்சி தயார்

கஜா புயல் வருவதை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் எடுக்கவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. அப்போது மாநகராட்சி பகுதிகளில் கால்வாய்களில் உள்ள சிறுபாலங்களில் அடைப்பு இல்லாமல் சரி செய்யுமாறும், கால்வாய்களில் எடுக்கும் குப்பைகளை உடன் அகற்ற உத்தரவிடப்பட்டது. மழைநீர் சீராக செல்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அடைப்பு ஏற்பட்டால் உடன் சரி செய்வதற்கு ஏதுவாக உபகரணங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. கழிவுநீரேற்று நிலையங்களில் அதிக திறன் உள்ள மின்மோட்டர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் தேவையான பம்புசெட்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள், மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றையும், அவசர கால முகாம்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் கமிஷனர் உத்தரவிட்டார். உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், ரெங்கநாதன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...