×

பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை, நவ. 14:  மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜூ. மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கணக்குப்பிள்ளையாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, அதே காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். ராஜூ, மனைவியை டூவீலரில் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை சென்றார். சிட்கோ தொழிற்பேட்டை முன்பு வந்தபோது, டூவீலரில் பின்தொடர்ந்த 3 மர்ம நபர்கள், ராஜூ மனைவி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நண்பனை கொன்றவர்களை பழிவாங்க வாளுடன் சுற்றிய வாலிபர் கைது