ரூ.2.40 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது

மேலூர், நவ. 14:  மேலூர் இன்ஸ்பெக்டர் ஜேசு, நேற்று இரவு அரசு கலைக்கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள அப்பொருட்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் காரையும் பறிமுதல் செய்தார். புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த ஹக்கீம்(33), நவாஸ்(23), கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜா முகமது(37) ஆகிய 3 பேரை மேலூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: