சமையல் தீ பெண் பலி

கொடைக்கானல், நவ. 14:  கொடைக்கானல் பெருமாள்மலை பழநி பிரிவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மல்லிகா (28). ஒரு மகள் உள்ளார். மல்லிகாவிற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் மல்லிகா தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பற்றி உடல் முழுவதும் பரவியது. இதில் சம்பவ இடத்திலேயே மல்லிகா உடல் கருகி பலியானார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: