உடுமலை அருகே குதிரையாறு செக்போஸ்ட் இயங்க கோரிக்கை

உடுமலை, நவ. 14: உடுமலையில் இருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் சாலையில், குதிரையாறு செக்போஸ்ட் உள்ளது. இங்கு காவலர்கள் யாரும் நியமிக்கப்படாமல் செயல் படாமல் உள்ளது. இதனால் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, நெய்காரபட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து கஞ்சா வியாபாரிகள் தங்கு தடையின்றி கஞ்சாவை உடுமலை பகுதிக்கு கொண்டு வந்து விற்கின்றனர்.ஏற்கனவே மடத்துக்குளத்தில் செக்போஸ்ட் உள்ளதால், இந்த கிராம சாலை வழியே சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வந்தனர். இதற்காகத்தான் இங்கு செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. தற்போது சமீபகாலமாக காவலர்கள் நியமிக்கப்படாதால் சமூக விரோத செயல்கள் ஜரூராக நடக்கிறது. எனவே, இந்த செக்போஸ்டை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: