புகையிலை, மது விற்ற 12 பேர் கைது

திருப்பூர், நவ.14:  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கள் இறக்குவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்தனர். திருப்பூர் முத்தனம்பாளையம் தென்னை மரதோட்டம் நந்தகுமார்(35), கருப்பாளையம் கொத்துகாரன் தோட்டம் ராமசாமி (39), கோவில் வழி தொண்டுகாட்டு தோட்டம் மகேந்திரன்(28), கே.செட்டிபாளையம் தெற்கு தோட்டம் மணிகண்டன்(32) ஆகியோர் அனுமதியின்றி தென்னை மரத்தில் கள் இறக்கியதற்காக கைது செய்யப்பட்டு 60 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். வீரபாண்டி மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்ற திருமூர்த்தி (43) கைது செய்யப்பட்டு 10 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காந்தி நகர், வஞ்சிபாளையம் உட்பட ஹோட்டல்களில் மது விற்பனை மற்றும் குடிக்க அனுமதித்த சக்திவேல்(26), குமார்(34), சங்கர்(38) உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: