கேரம் போட்டியில் பங்கேற்க 18ல் வீரர்கள் தேர்வு

திருப்பூர், நவ.14:  மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கேரம் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் ஜூனியர் பிரிவு வீரர், வீராங்கனைகள் நேர்முகத் தேர்வு வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கேரம் சங்க தலைவர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அளவிலான 40வது ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நவம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் நேர்முகத் தேர்வு வரும் 18ம் தேதி திருப்பூர் பல்லடம் சாலை காட்டுவளவு பகுதியில் உள்ள திருப்பூர் மாவட்ட கேரம் சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  இந்த தகுதி தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளில் இருந்து தகுதி உடையோர் மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாநிலப் போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்.  நேர்முகத் தேர்வுக்கு வருவோர் 26.11.2000 தேதிக்கு் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தங்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் பங்கேற்பது அவசியம். இது தொடர்பான முன்பதிவு, கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் கன்னியப்பன் (91714 59091), இணைச் செயலாளர் ரமேஷ் (97919 06942) ஆகியோரை் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: