அவிநாசி, நவ.14: திருப்பூர் 7வது வார்டு குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டகோரி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அவிநாசிகவுண்டம்பாளையத்தை அடுத்த பாலு இன்னோவேசன் குடியிருப்பு பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் கழிவுநீரை வெளியேறும் வகையில் மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது.
ஆனால், கால்வாய் மூடப்படாமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருப்பதால் குப்பைகள் அடைத்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இந் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காந்திநகர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை, பாலு இன்னோவேசன் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயுடன் இணைத்து நல்லாற்றுப்பாளையம் ஓடையில் சென்று கலக்கும் வகையில் ஏற்கனவே புதிய கால்வாய் கட்டப்பட்டுள்ளது.