பொள்ளாச்சி, நவ. 14: பொள்ளாச்சி துணை மின்நிலையம், மார்ச்சநாயக்கன்பாளையம், தாளக்கரை முத்தூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (நவ.15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுபாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பில்சின்னாம்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர்.