×

குடிமகன்கள் அட்டூழியம் காட்சி முனைக்கு ‘சீல்’

வால்பாறை, நவ.14:  குடிமகன்களின் அட்டூழியத்தால் வால்பாறை 9வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள 9 வது கொண்டை ஊசி வளைவு சுற்றுலா பயணிகளின் கண்கவரும் இடமாக உள்ளது. காட்சிமுனை பகுதியில் இருந்து ஆழியார் அணையின் தோற்றமும், சில்லென்று வீசும் காற்றும் சுற்றுலா பயணிகளை குதூகலப்படுத்துகிறது.இதுதவிர, அப்பகுதியில் வலம் வரும் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு கண்டு மகிழ்வது வழக்கம்.

9வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,`மாலை, இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் குடிமகன்கள், ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் முகாமிட்டு, மது அருந்தி புகைபிடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.மது பாட்டில்களை பாறைகளில் வீசி உடைத்து செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் வரும் வரையாடுகள் மற்றும் குரங்குகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 9 வது கொண்டை ஊசி வளைவுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Citizens ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...