வால்பாறை, நவ.14: வால்பாறை மலைப்பாதையில் அரசு பஸ்சின் டயர் வெடித்து பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டது. பஸ்சில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பகல் ஒரு மணிக்கு வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியிலுள்ள டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை அருகே பஸ் வந்தபோது திடீரென டயர் வெடித்து பஸ் பழுதாகி பாதி வழியில் நின்றது.