ஈரோடு, நவ. 14: திமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நாளை ஈரோட்டில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள வசதியாக திமுக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து அண்மையில் திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நாளை 15ம் தேதி நடக்கிறது.