20ம் தேதி மாவட்ட விளையாட்டு போட்டி

ஈரோடு,  நவ. 14: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு  பிரிவின் சார்பில் அக்டோபர் மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 20ம்தேதி காலை 8 மணிக்கு ஈரோடு வ.உ.சி.பூங்கா  விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பள்ளியில் படிக்கும்  6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்கள் மட்டுமே கலந்து  கொள்ளலாம். தடகளத்தில் மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீ, 400 மீ,  1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும்  குண்டு எறிதல் போட்டிகளும், மாணவியர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400  மீட்டர், 800 மீட்டர் ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு  எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

மேலும் கால்பந்து,  கையுந்து பந்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. நீச்சல் போட்டியில் 50  மீட்டர், 100 மீ, 200 மீ, 400 மீட்டர் பிரிஸ்டைல், 50 மீட்டர் பேக்  ஸ்டிரோக், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக், 50 மீட்டர் பட்டர் பிளை, 200  மீட்டர் ஐ.எம் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. தடகளம்  மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு  போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் தடகளம், குழு விளையாட்டு  போட்டிகள் நடக்கும் நாளான 20ம்தேதி காலை 8 மணிக்கு தங்கள் பெயரினை பதிவு  செய்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும்  வழங்கப்படும்.

 தடகளம், குழு மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து  கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரிடமிருந்து சான்றிதழ் பெற்று  கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயிலின்ஜான்  தெரிவித்துள்ளார்.

Related Stories: