ஈரோடு, நவ. 14: தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 11ம்தேதி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பூபாலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 600 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு வார விடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ வழங்கப்படுவதில்லை.