கைப்பிடி சுவரில் அமர்ந்து மது குடித்த வேன் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

நெல்லை, நவ. 14: கூடங்குளம் அருகே செட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராமநாடார் மகன் சிவசுப்பிரமணியன் (33). வேன் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 11ம் தேதி இரவு நாகர்கோவில் சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனிடையே நேற்று காலை செட்டிக்குளம் பைபாஸ் சாலையில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் இருந்து இறந்தவர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் சடலமாக கிடந்தவர், சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது.

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிந்து சிவசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றின் கைப்பிடி சுவரில் அமர்ந்து மது அருந்தியபோது அவர், தவறி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.

Related Stories: