பெருந்துறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் ேபாதை கணவர் தற்கொலை

பெருந்துறை, நவ.14: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் கோவில்பாளையம் சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரராஜா(33). இவர் சிப்காட்டில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷோபனா(21) என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கம் உள்ள குமாரராஜா அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு சென்றுள்ளார்.  

இதனால் மனமுடைந்த அவரது மனைவி குமாரராஜாவிடம் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை பிரிந்து ஏக்கத்தில் இருந்து வந்த குமாரசாமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பெட்ரூமின் மேற்கூரையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: