பாபநாசத்தில் அனுமதியின்றி சந்தனக் கட்டை வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்

வி.கே.புரம், நவ. 14:  பாபநாசத்தில் அனுமதியின்றி சந்தன கட்டை வைத்திருந்த 3 பேருக்கு வனத்துறையினர் ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பாபநாசம் வனச்சோதனை சாவடியில் கடந்த 11ம் தேதி வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 800 கிராமிற்கு பச்சை சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்த பாபநாசத்தை சேர்ந்த பால்துரை மகன் அகஸ்தியராஜ், இவரது உறவினர் சக்திவேல் மற்றும் மகாதேவன் மகன் சொரிமுத்து அய்யனார் ஆகியோருக்கு மொத்தம் ரூ.38 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகவலை பாபநாசம் வனச்சரகர் பாரத் தெரிவித்தார்.

Related Stories: