காதலனுடன் சென்ற மனைவியை மீட்க வந்த கணவர் கைது

சிவகிரி,நவ.13: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்க சென்ற கணவன் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லி நகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குமரேசன்(32) பில்டிங் காண்டிராக்டர்.அதே ஊரை சேர்ந்த பாலுசாமி மகள் கவிதா(27). சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த கவிதா, அவரது உறவினர் வீட்டில் வளர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுக்கு முன் கவிதாவுக்கும் குமரேசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஐஏஎஸ்., படிக்க விரும்பிய கவிதாவை குமரேசன் சென்னையில் உள்ள அகாடாமியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், கவிதாவுக்கும் அவரது உறவினரான சென்னிமலை பசுவபட்டி பூச்சக்காட்டுவலசுவை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் அறிமுகம் ஆனது. இதனை தொடர்ந்து கார்த்திக், கவிதாவை சிவகிரிக்கு அழைத்து வந்தார். தனது மனைவி கவிதாவை தேடி சென்னை சென்ற குமரசேன், அவரை கார்த்திக் அழைத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கவிதாவின் உறவினர்களான ரமேஷ் (33), ராஜேஷ்(27), மதன்(24), தினேஷ்(24) மற்றும் செல்வி(60) ஜெயா(24) சுகந்தி(28) ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் குமரேசன் காரில் சிவகிரிக்கு வந்துள்ளார்.

அவர்கள் கவிதாவை தேடி கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்திக்கின் அப்பா ஆறுமுகம் கார்த்திக் கடத்தப்பட்டதாக சிவகிரி போலீசில் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கவிதாவின் கணவர் குமரசேன் மற்றும் அவருடன் வந்த கவிதாவின் உறவினர்கள் 8 பேரையும் கலகம் விளைவித்தல், ஆட் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார்த்திக்கின் மாமா ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அதிகாரியாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் சிவகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: