பணகுடி, நவ. 14: கூட்டப்புளி சுனாமி காலனியை சேர்ந்தவர் சந்தியாகு ராயப்பன் மகன் கிறிஸ்டோபர் (20). மீன்பிடிதொழில் செய்து வந்த இவரை, காதல் விவகார தகராறு வழக்கு விசாரணைக்காக பழவூர் போலீசார் அழைத்து உள்ளனர். கடந்த 11ம் தேதி இரவு தாயாரிடம் செல்போனில் பேசிய கிறிஸ்டோபர், போலீசார் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து இதே ஊரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் கிறிஸ்டோபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.