பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மானூர், நவ. 14: மானூர் அருகே கானார்பட்டியை சேர்ந்தவர் லாரன்ஸ் கோயில்பிள்ளை(58). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி எஸ்தர்(58). இவர்களுக்கு டேனியல் என்ற மகனும், ஜேக்குலின் என்ற மகளும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். எஸ்தர், மகள் வீட்டில் இருந்து வருகிறார்.

கானார்பட்டியில் புதிதாக வீடு கட்டும் பணியை லாரன்ஸ் மேற்பார்வை செய்து வந்தார். கடந்த 11ம்தேதி நெல்லை செல்வதற்காக மைத்துனர் ஜேனஸ்ட்பாலுடன் பைக்கில் சென்றார். ரஸ்தா-மதவக்குறிச்சி விலக்கு அருகே வரும்போது வேகத்தடையில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார். இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: