16ம் தேதி அடையாள அணிவகுப்பு

சென்னை: சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் மேற்கூரையை துளையிட்டு 5.78 கோடி செல்லாத நோட்டுகளை கொள்ளையடித்த மத்திய பிரதேச சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி, மோஹர் சிங், காளியா (எ) கிருஷ்ணா (எ) கபு, மகேஷ் பர்டி, ரூசி பர்டி, பிலித்தியா (எ) பர்ஜிமோகன் என 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், புழல் சிறையில் நாளை மறுநாள்  சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் சுப்ரஜா முன்னிலையில் (16ம் தேதி) அடையாள அணி வகுப்பு நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Related Stories: