முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பூஜை

உளுந்தூர்பேட்டை, நவ. 14: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் நேற்று காலை முருகனுக்கு பால், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் திருநாவலூர், எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

Related Stories: