×

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 12 பேர் படுகாயம்

திண்டிவனம், நவ. 14: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து கொள்ளார் கிராமத்துக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றது. திண்டிவனம் - செஞ்சி சாலையில் வேம்பூண்டி கூட்டு சாலை தனியார் பாலிடெக்னிக் அருகே சென்றபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக செஞ்சி
யில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கொள்ளார் பகுதியை சேர்ந்த ஞானசேகர், காயத்ரி, அமுதா, சந்திரா, பன்னீர்செல்வம், ராமதாஸ், தீவனூரை சேர்ந்த முனுசாமி, சாலை கிராமத்தை சேர்ந்த குமார், மொளசூரை சேர்ந்த செந்தில் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது விபத்து குறித்த புகாரின்பேரில் ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களுக்கு இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. இவ்வாறு ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...