திருக்கோவிலூர், நவ. 14: கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமல்ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி மாணிக்கம்(50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலிங்கம் குடும்பத்திற்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாணிக்கம், கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார்.