சுற்றுலா கழக ஊழியர்கள் நாளை ஊர்வலம், மறியல்

புதுச்சேரி, நவ. 14: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழக கேட்டரிங் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (பிடிடிசி) பணிபுரியும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இறந்தவர்களின் வாரிசுதாரர்களின் பிள்ளைகளுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த ஒரு வருடமாக ஊதியமின்றி பணிபுரியும் சுற்றுலா பாதுகாவலர்களை பணிநிரந்தரம் செய்து நிலுவை சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாளை (15ம் தேதி) விடுப்பு எடுத்து காலை 10 மணிக்கு பெரியார் சிலை, செண்பகா ஓட்டல், கம்பன் கலையரங்கம், ரயில் நிலையம் ஆகிய 4 இடங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: