புதுச்சேரி, நவ. 14: தீபாவளி பணம் கிடைக்காமல் விடுபட்ட 13 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு விரைவில் அவர்களது குறைகள் சரிசெய்யப்பட்டு பணம் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் அறிவித்துள்ளார். புதுவை அரசின் தீபாவளி பணம் வங்கிக் கணக்கில் கிடைக்கப் பெறாதவர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை 12ம்தேதி முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக பணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.