புயலை எதிர்கொள்ள பாகூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பாகூர், நவ. 14: புதுச்சேரியில் நாளை கடக்க இருக்கும் கஜா புயலை எதிர்கொள்ளும் விதமாக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் சௌந்தரராஜன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊழியர்கள் விடுப்பு எடுக்க கூடாது. அந்தந்த பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கொம்யூன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டு அறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவிக்கக வேண்டும். எந்த சூழ்நிலையிலும் புயலை சமாளிக்க ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: