புதுச்சேரி, நவ. 14: புதுவையில் கஜா புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட காங்கிரசார் தயார் நிலையில் இருக்க வேண்டுமென நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவையில் கஜா புயலை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இதனிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியை நெருங்கிவரும் கஜா புயலை எதிர்கொள்ள காங்கிரஸ் அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது. அதேநேரம் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் புயல் கரையை கடக்கும்பொழுது ஏற்படும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்