×

மதிய உணவு வழங்க மறுப்பதா? அரசு மருத்துவமனையில் பாஜக திடீர் தர்ணா

புதுச்சேரி,  நவ. 14: புதுவை, அரசு பொது மருத்துவமனையில் உட்புற நோயாளிகளுக்கு கடந்த  சில வாரங்களாக மதிய உணவு வழங்கப்படவில்லை. பாப்ஸ்கோ காய்கறி சப்ளையை  நிறுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள்  அவதிக்குள்ளாகினர்.  இதனிடையே நேற்று மதியம் அங்கு வந்த பாஜக நியமன  எம்எல்ஏவும், மாநில தலைவருமான சாமிநாதன் அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி  கேள்வி எழுப்பினார். அப்போது உட்புற நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால் அதை ஏற்க மறுத்த பாஜகவினர் அங்கு உடனே தர்ணாவில் ஈடுபட்டனர்.  அப்போது நோயாளிகளுக்கு உடனடியாக அரசு மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கையை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். தகவல் கிடைத்து விரைந்து வந்த பெரியகடை  போலீசார், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும்  கலைந்து சென்றனர்.

Tags : BJP ,government hospital ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...