×

வயலுக்கு வைத்த எலிமருந்தை சாப்பிட்ட 9 ஆடுகள் பலி

வில்லியனூர், நவ. 14: வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் பகுதியில் வயலில் வைக்கப்பட்டிருந்த எலிமருந்தை சாப்பிட்டு 9 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ஜோதி (40). ஆடு பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஆடுகள் அருகில் இருந்த ஒரு நெல் வயலில் புகுந்து நெற்பயிரை மேய்ந்துள்ளது. பிறகு திடீரென ஒவ்வொரு ஆடாக மயக்கம் போட்டு கீழே விழ தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோதி அருகில் சென்று பார்த்தபோது நெல் வயில் எலிகளை கட்டுப்படுத்த வைத்திருந்த எலிமருந்தை ஆடுகள் சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து எலிமருந்தை சாப்பிட்ட 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. ஒரே நேரத்தில் 9 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...