புதுச்சேரி, நவ. 14: புதுவை பல்கலைக்கழகம், உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்ற சுபலட்சுமியின் ஆய்வு பணிகளை பாராட்டி, ஹரியானா மாநிலம் மானேஸ்வரில் இயங்கி வரும் தேசிய மூளை ஆராய்ச்சி மையமானது ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதை வழங்கி
கவுரவித்துள்ளது. இவ்விருதை பெற்ற பேராசிரியை சுபலட்சுமி, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.