தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஏழை மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பயிற்சி வகுப்புகளை முற்றிலும் இலவசமாக நடத்தி வருகிறது.
மாணவ, மாணவியருக்கு சிறந்த பயிற்றுனர்கள் மூலம் கடந்த 2வருடங்களாக இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளின் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழக அரசின் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடம் பெற்றுள்ளனர்.