குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் குளத்தில் மூழ்கி சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்த பொம்மையாபுரத்தை சேர்ந்த அலங்காரம் மகன் சின்னமாரியப்பன் (48). சமையல் தொழிலாளி. இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், செல்வி என்ற மகளும், சதிஷ் என்ற மகனும் உள்ளனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று வானரமுட்டியில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்ற சின்னமாரியப்பன் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். பின்னர் கோயில் அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்றார்.

 அப்போது குளத்தின் மையப்பகுதிக்கு சென்ற சின்னமாரியப்பன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குளத்தில் மூழ்கி பலியான சின்னமாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: